யார் இந்த தேவதை...


தேவதைகள்
எப்போதும்

வெள்ளை
மட்டுமே
அணிவதில்லை
..

நீ
இன்று மஞ்சள் தாவணியில்..

*********
தினமும் நீ
என்ன நிறத்தில்
உடுத்தியிருக்கிறாய் என்பதை
ஆவலோடு பார்க்கிறேன்..

அன்றைய 'அதிர்ஷ்டக்கார' நிறத்தை தெரிந்து கொள்ள..

***********
நீ கண்ணம் வைத்து
பேசும் சுகத்துக்காகவே,
ஒரு ரூபாயில்
மணிக்கணக்கில் இயங்குகிறது

கடை வீதி 'காயின் பாக்ஸ்'..

********

பலருக்கு வரத்தால்
குழந்தை பிறக்கும்..
வரமே குழந்தையாய் பிறந்தது
உன் பெற்றோருக்குத்தான்..

********

எடுத்து வீசிய
பின்
தான் வாடியது,
நீ தலையில் வைத்திருந்த
ரோஜா பூ..

********

நீ
கோவிலுக்கு வருவாய் என,
வெள்ளிக்கிழைமை தோறும்
சிறப்பு அலங்காரம்
செய்து கொள்கிறது சாமி..

*******

நீ 'ச்சே' என்று
சலித்து கொண்டு
மணி பார்க்கும் அழகுக்காகவே
உன் கல்லூரி பேருந்து
தினமும் தாமதமாக வர
வேண்டிக் கொள்கிறோம்

நானும் உன் கை கடிகாரமும்..

*******
மாமல்லபுர சிற்பங்கள்
எல்லாம் உன் சாயலில்..
உண்மையை சொல்
போன ஜென்மத்தில்
பல்லவன் ராஜ்ஜியத்தில் பிறந்தாயா??

********
எல்லா ரோஜா செடிகளும்,
மஞ்சள் நிறத்திலேயே பூக்கின்றன..
உனக்கு
மஞ்சள் ரோஜா தான்
பிடிக்கும் என
ஏன் சொன்னாய்??

********

யார் கண்டார்?
உன் வீடு
கிழக்கு நோக்கி இருப்பதால் தான்
கதிரவன் தினமும்
கிழக்கில் உதிக்கிறானோ என்னவோ??
*********

காதலுடன்,

உன் பேர் சொல்ல ஆசைதான்..


ங்கீதமாய்,
ம்யமாய்,
பெண்மையாய்,
யாழிசையாய் இருக்கிறது
உன் பெயர்..

அடைக்கலம் தருபவள் என்று
அர்த்தமாம் உன் பெயருக்கு..
அதை உண்மையாக்கு
என் காதலுக்கு அடைக்கலம் கொடுத்து..


என் பெயரை
யாராவது கேட்டால் கூட
உன் பெயரை சொல்லி
அசடு வழிகிறேன்..

எந்த மொழியில் எழுதினாலும்
அழகாய்த்தான் இருக்கிறது
உன் பெயர்..

உன் பெயரை சொல்லி
யாராவது அழைத்தால்
உனக்கு முன்னால் திரும்புகிறேன்
அனிச்சையாய் நான்..

அழகு குழந்தைகளை
பார்க்கும் பொழுதெல்லாம்
உன் பேர் சொல்லியே கொஞ்சுகிறேன்..
என்னையுமறியாமல்..

உன் பெயர் தாங்கிய
சாலையோர பெயர் பலகைகள் மட்டும்
அதிகமாய் மிளிர்கின்றன..

காத்திருக்கிறேன்..
எப்போது வெளிவரும்?
உன்பெயரில் தொடங்கும் திரைப்பாடல்!

கவிதை ஒன்று எழுத நினைத்து
காகிதம் பல கசக்கி, கடைசியில்
உன் பெயர் மட்டும் எழுதி முடிக்கிறேன்,
காவியம் எழுதிய திருப்தியில்..

காதல் மழை...

காதலிப்பவர்கள்
சொர்க்கத்தை அடைவார்கள்..
காதலிக்கப்படுபவர்கள்
சொர்க்கத்தை உணர்வார்கள்..

**************

கலைந்து போன ஒரு மேகத்தின் கண்ணீர் துளி இந்த காதல் மழை..
நனைவோம் வாருங்கள்..