காதல் கடிதங்கள்..


கனவே கனவே
என் கனவெல்லாம் நீயே...

அசுரனே வந்தாலும்
அசராத என்னை
சிறு புன்னைகையாலே
வெட்டி சாய்த்தாய்...

நீ நடக்கும் வீதியில்
தூசியே இருக்காது
நீ வருவாய் என்று
நூறு முறை
நான் கடந்து போவதால்...

நீ இருக்கும் இடத்தில்
வெயில் இருக்காது
நிழலாய் உன்னை
நான்
தொடருந்து வருவதால்...

நீ தூக்கி ஏறியும்
குப்பைக்குக்கூட
கால் இருக்கிறது
என் அறையில் எப்படியோ
அது குடி புகுவதால்...

என் வீட்டு கண்ணாடி
பொய் சொல்கிறது
அதில்
என்னைக் காணாமல்
உன்னைக் காண்பதால்

உன் பார்வை தூண்டிலில் தவிக்கும் மீன் நான்
ஆனால் இன்னும்
தூண்டிலைத்தான் காதலிக்கிறேன்

என்னைத் துண்டு
துண்டாக்கிவிட்டு நீயோ
தூரமாய் போகிறாய்...

தூக்கத்தைத் தொலைத்து நான்
திருடனாய் விழிக்க
உன்னிடம் கொடுக்காத
என் காதல் கடிதங்கள் மட்டும்
சுகமாய் தூங்குகின்றன
என் படுக்கை அறையில்...!!!

காதல் செரிக்காது...!



நான் உன்னைக் காதலிக்கிறேனென்று
உன்னிடம் வரும்போது
நீ பார்க்கும் பார்வையையும்
முடியாதென வந்து
விழப்போகும் சொற்களையும்
அப்படியே விழுங்கிவிடு.

என்னைப்பார்த்து
இதுவரை நீ சிரிக்கவேயில்லை
என்பதை மட்டும்
நினைவில் பொருத்திக்கொண்டு
அமாவாசை இருட்டில் சிரிப்பது
போலொருமுறையேனும்
சிரித்து விடு.

பாட்டியிடம் இரவுக்கதைகேட்கும்
ஒரு சிறுமி போல், உன்னை
நினைத்துக் கொள். நான்
காதல் சொல்லி விட்டுப்
போகின்றேன்.

சொல்லி முடித்தபின்
மறுத்தாலும். .,
காதல் ஏற்படுத்திக்கொடுத்த
உணர்வும் நிகழ்வும்
உன்னைப் பின்தொடர்ந்து
வந்து கொண்டேதானிருக்கும்
பின்னொருநாளில்,
அக்காதலை நாமிருவரும்
சேமித்து வைக்காமல்
செரித்து விட்டாலும் கூட..!

Next மீட் பண்ணுவோம்
♠ராஜூ♠

குறிப்பு: இன்று முதல் இங்கு(ம்)..!