சாட்சி!
சிந்தை நிறைத்து
வாலிபம் ஊடுருவும்
கருவறையின்
பெருஞ்சுவரில்
மோதி,மோதியென்
குருதி இழக்கிறேன்.
இன்னதெனச் சொல்ல
முடியா வண்ணத்தில்
இருந்ததென் குருதி.
சுவரைக் குருதியின்
நிறம் கவரத்
தொடங்கிய கணத்தின்
முடிவில்,
என்னுள் நீயில்லை.
உன்னை அழைத்துச்
செல்ல,அவ்வறை
நோக்கி வந்த
காற்றுக்கு சாட்சியாய்
சிறகடிக்ககிறது,
படுக்கையில் உதிர்ந்த
உன்
ஒற்றைக் குழல்.
வாலிபம் ஊடுருவும்
கருவறையின்
பெருஞ்சுவரில்
மோதி,மோதியென்
குருதி இழக்கிறேன்.
இன்னதெனச் சொல்ல
முடியா வண்ணத்தில்
இருந்ததென் குருதி.
சுவரைக் குருதியின்
நிறம் கவரத்
தொடங்கிய கணத்தின்
முடிவில்,
என்னுள் நீயில்லை.
உன்னை அழைத்துச்
செல்ல,அவ்வறை
நோக்கி வந்த
காற்றுக்கு சாட்சியாய்
சிறகடிக்ககிறது,
படுக்கையில் உதிர்ந்த
உன்
ஒற்றைக் குழல்.
-♠ராஜூ♠