காதல் மருந்து



உடல் பிணி
படுத்திடும் போதும்..

தொடர் பணி
 கடுத்திடும் போதும்..

இனித்திடும்
உன் நினைவுகள்..

தணித்திடும்
என் உபாதைகள்...

காதல் நினைவு...



நினைவு
தெரிந்த நாள்
முதல்
தலைமுடியை
 தூக்கி வாரி
வணங்காமுடியாய்
வளைய வருவதுதான்
என் பழக்கம்...

ஒரு தீபாவளித் திருநாளில்
எனது வீட்டிற்கு வந்து
திரும்பும் உன்னை
பேருந்துநிலையம் வரை
வழியனுப்ப
நானும்
உடன் நடந்து
வந்து கொண்டிருந்தேன்...

ஆளில்லா இருட்டுச்சாலை
அந்திக்கருக்கல்காற்றில்
அலைந்து கலைந்திருந்த
 என் தலைமுடியை
மேலும் கலைத்து
பணியச் செய்து
பார் இப்போது
முன்னை விட
அழகாகி விட்டாய்
என்றாய்…

அன்று முதல்
மாறியது
என்
தலை எழில்
மட்டுமல்ல …

காதல்  கன்னி
உன் 
கை பட்டு
தடதடத்து
தடுமாறிப்
போனது
 என்
 தலை எழுத்தும்
கூடத்தான்…

காதல் இடுகைகள்




உள்ளத்தில் 
 எப்போதும்
உன் நினைவுகள்

ஊற்றாய்
 சுரக்குது
உள்ளிருந்து 
 பல புனைவுகள்

கண்மூடாமல் 
நான் கண்டிடும் 
 கனவுகள்

காலம் 
கனிந்திட்டால்
ஆகிடும் நனவுகள் 

என் மனதில்  
நீ எழுப்பிட்ட
காதல் படுகைகள்

எண்ணி எண்ணி
 இறைத்திடும்
இதுபோல்
 பலப்பல 
இடுகைகள்

காதல் வெள்ளம்




பொங்கி வரும் 
காவிரியை 
தடுத்திடலாம் 
கல்லணை...

பூரித்து வரும் 
என் 
காதல் வெள்ளம் 
தாங்கிடுமா
 உன் 
கண் அணை...

-----------------------------------------------------------------------------------------------



தலை குளித்து
 நீ
 வரும் நேரம்...

எதிர் வரும்
என் நிலை
குறித்தும் 
கவனம் கொள்...

-------------------------------------------------------------------




உற்றுப் பார்த்தேன் 
உன் முதுகில் 
சில பூனைமுடி...

 ஊற்றெடுத்து
சுரக்குது
என் உள்ளத்தில்
 பல ஞானமடி...

காதல் மொழிகள்




போதுமென்ற 
மனமே
பொன் செய்யும்
 மருந்து…

பொழுது  எத்தனை
ஆனாலும்
அலுக்கவில்லை
கன்னி உன்
காட்சி விருந்து…

---------------------------------------------------------

சிப்பியில்
விளைவது
முத்து…

அழகுச்சிற்பமே
எப்போது ஆவாய்
நீ எந்தன் சொத்து….

---------------------------------------------------------


அறம்
பொருள்
இன்பம்...

அத்தனையும் 
தேடி
உன் பின்
அலைவதில் தான்
எத்தனை
துன்பம்...

காதல் பா(ட்)டு




இயல்
இசை
 நாடகம்

கன்னி நீ
 எல்லாம்
 கலந்த
ஊடகம்

பாவை
உன் பார்வை
போடும்
பூடகம்

எப்போதும்
எனக்கு
 புரிந்திடா
ஏடகம்

நங்கை நீ
இல்லா
வாழ்க்கை
கடும் காடகம்

இதயம் இளகி
 என் வாழ்வில்
இணைந்து
எப்போது
பாடுவாய்
காதல் பாடகம்

காதல் ஏக்கம்



பாவை
உன் மீது
கொண்டேன்   
பாங்காய்
காதல் ஏக்கம்


பாழாய்
போனது
பாவி என்
பலநாள்
 இரவு தூக்கம்


 வஞ்சி
உன்னை
அடைவதே
வாலிபன்  
என்
வலிய நோக்கம்


கொஞ்சிப்
 பேசி
கொடுத்திடு
 குறைவிலா ஊக்கம்

தத்தை 
உன் செயலால்
தணிந்திடுமே
காதல் காய்ச்சலின்
தாக்கம்...

சோம்பல் சுந்தரி...



சோம்பல் முறிக்கும்
சுந்தரி 
உன் அழகு….

சொக்கிப் போனேன்
 சொல்ல இல்லை 
ஒரு அளவு…

தத்தை நீ
தடையில்லாமல்
நடத்திடும்
தொடர் காதல் களவு…

தடுக்க விரும்பாமல்
தவிக்குது
 என் மன உளவு…

எழில் அழகி நீ
எப்போதும்
என்னைச் சுற்றி
வட்டமிடும்
 காதல் கழுகு…

ஏடாகூடம் ஏதும்
 ஆகிடாமல் இருக்க
எட்டி இருந்தே
 எதற்கும்  பழகு…


காதல் மனம்



காய்க்கும்  மரம்
கல்லடி  படும்…

காதலிக்கும்  மனம்
சொல்லடி படும்...

கல்லடி படும்  மரம்
பல கனி கொடுக்கும்...

சொல்லடி படும் மனம்
நல் கவி கொடுக்கும்...

மரம் படும்பாடு
மனம்  அறியும்...

காதல் மனம் பாடும்  பாடல்
பல மனிதர்  அறியாரே…

மச்சக்காரி...



உனக்கே தெரியாமல்
ஒளிந்து இருக்கிறது
உன் உடம்பில்
 எததனையோ மச்சம்…

அங்கெல்லாம்  
 ஒட்டிக் கிடக்கிறது
ஏழை என்
 உயிரின் எச்சம்…

----------------------------------------

அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழ்...

அறிந்த என் மனம்
பண்ணத்துடிக்குது
உன்  இதழ் கதவை பாழ்….

காதல் கரிசனம்



நீ  வெட்கப்பட்டு  பார்த்தால்
நான்  தூக்கம் கெட்டு போகிறேன்…

நீ ஓரக்கண்ணால் பார்த்தால்
நான் நேரம் மறந்து நிற்கிறேன்…

நீ கடைக்கண்ணால் பார்த்தால்
 நான் விடை தெரியாமல் திரிகிறேன்...

கண்பிரியம் காட்டிடும் பெண்ணே
திண்மனம் நெகிழ்ந்து
காதல்கருணையோடு வேண்டும்
கொஞ்சம் கரிசனம்...

முகம் காட்ட மறுக்காமல்
முன்வந்து தந்திடு
உன் முழு தரிசனம்...

கன்னி உனைக்கண்டால் அனுதினம்
அடைந்திடும் அமைதி என்மனம்.