யார் இந்த தேவதை...

தேவதைகள்
எப்போதும்
வெள்ளை மட்டுமே
அணிவதில்லை..
நீ இன்று மஞ்சள் தாவணியில்..
*********
தினமும் நீ
என்ன நிறத்தில்
உடுத்தியிருக்கிறாய் என்பதை
ஆவலோடு பார்க்கிறேன்..
அன்றைய 'அதிர்ஷ்டக்கார' நிறத்தை தெரிந்து கொள்ள..
***********
நீ கண்ணம் வைத்து
பேசும் சுகத்துக்காகவே,
ஒரு ரூபாயில்
மணிக்கணக்கில் இயங்குகிறது
கடை வீதி 'காயின் பாக்ஸ்'..
********
பலருக்கு வரத்தால்
குழந்தை பிறக்கும்..
வரமே குழந்தையாய் பிறந்தது
உன் பெற்றோருக்குத்தான்..
********
எடுத்து வீசிய
பின் தான் வாடியது,
நீ தலையில் வைத்திருந்த
ரோஜா பூ..
********
நீ
கோவிலுக்கு வருவாய் என,
வெள்ளிக்கிழைமை தோறும்
சிறப்பு அலங்காரம்
செய்து கொள்கிறது சாமி..
*******
நீ 'ச்சே' என்று
சலித்து கொண்டு
மணி பார்க்கும் அழகுக்காகவே
உன் கல்லூரி பேருந்து
தினமும் தாமதமாக வர
வேண்டிக் கொள்கிறோம்
நானும் உன் கை கடிகாரமும்..
*******
மாமல்லபுர சிற்பங்கள்
எல்லாம் உன் சாயலில்..
உண்மையை சொல்
போன ஜென்மத்தில்
பல்லவன் ராஜ்ஜியத்தில் பிறந்தாயா??
********
எல்லா ரோஜா செடிகளும்,
மஞ்சள் நிறத்திலேயே பூக்கின்றன..
உனக்கு
மஞ்சள் ரோஜா தான்
பிடிக்கும் என
ஏன் சொன்னாய்??
********
யார் கண்டார்?
உன் வீடு
கிழக்கு நோக்கி இருப்பதால் தான்
கதிரவன் தினமும்
கிழக்கில் உதிக்கிறானோ என்னவோ??
*********
காதலுடன்,