தேடல்..

மனப் பாலையின்
சுடுமணல்
பாதச் சுவடுகளில்
எங்கிருக்கிறது எனக்கான
கொலுசு
அணிந்த பாதத்தின்
சுவடு.

மழை
கொண்டு போயிருக்கலாம்.
காற்றினால்
சிதறியிருக்கலாம்.
எதுவாகினும்,
மீட்டெடுக்க முடியாத
தருணங்களின்
தொகுப்புதான் காதல்!

-ராஜூ
2 Responses

  1. அருமையான காதல்க் கவிதை வாழ்த்துக்கள் சகோ .
    மிக்க நன்றி பகிர்வுக்கு ........