பிரிவையும் நேசிக்கிறேன்..
உன் பெயரை,
உன் பரிசத்தை,
உன் பெண்மையை,
உன் அருகாமையை,
உன் அழகை,
உன் அதட்டலை,
உன் அன்பை,
உன் வார்த்தையை,
உன் வசீகரத்தை,
உன் நிழலை,
உன் நாணத்தை,
உன் வாசத்தை,
உன் சுவாசத்தை ,
உன் கோபத்தை,
உன் கொஞ்சலை,
உன் நடையை,
உன் நளினத்தை,
உன் மச்சத்தை,
உன் முத்தத்தை,
எல்லாவற்றையும் நேசித்திருக்கையில்
காதலை உணர்ந்தேன்..
இப்போது உன் பிரிவையும் நேசிக்கிறேன்..
சாதலை உணர்கிறேன்..