காதல்...காதல்..காதல்.



கோடையில் கொசுக்கடி

அதனினும் கொடியது
உன் நினைப்படி

அன்றாடம் நீ
புழங்கும் அறையடி

அங்கெலாம் நான்
இல்லாக் குறையடி

இடுப்பிலே உனக்கு மடிப்படி

அங்கே இருந்து  தவிக்குது
 என் இதயத்துடிப்படி

ஊரெல்லாம் இருக்குது உறவடி

நீ  இல்லாமல்
என்நிலை துறவடி

அனைவரும் வியக்கும்
அழகுச்சிலையடி

அருகில் இருந்து
 ரசிக்க முடியா
நிலையடி

அனுதினம் வருகுது
காலை மாலையடி

அன்பே உன் அருகாமை
வேண்டி நான்
அரற்றுவது
கடும் பாலையடி

கன்னி நீ இருக்கும்
திசையடி

காண முடியா மனதில்
 உன் நினைவு கசையடி

பறக்க எனக்கில்லை சிறகடி 

பாவை உனை நினைத்து
பதறும் என்நிலை
ஈரம்காய்ந்த விறகடி

ஓய்வில்லா உழைப்படி
ஒப்புக்குத்தான் இந்த பிழைப்படி
போதும் பொன்னே  இந்த இழப்படி
  
வேண்டும் இறைவன் நினைப்படி
அமைப்போம் வாழ்வை நல்ல நிலைப்படி

எப்பொழுது தான் சேர்வேன் உன்னை
அப்பொழுது நான் மறப்பேன் என்னை

அந்த நாளும் வருவது எப்போது
எண்ணி ஏங்குது என்மனம் இப்போது....
0 Responses