காதல் நினைவு...



நினைவு
தெரிந்த நாள்
முதல்
தலைமுடியை
 தூக்கி வாரி
வணங்காமுடியாய்
வளைய வருவதுதான்
என் பழக்கம்...

ஒரு தீபாவளித் திருநாளில்
எனது வீட்டிற்கு வந்து
திரும்பும் உன்னை
பேருந்துநிலையம் வரை
வழியனுப்ப
நானும்
உடன் நடந்து
வந்து கொண்டிருந்தேன்...

ஆளில்லா இருட்டுச்சாலை
அந்திக்கருக்கல்காற்றில்
அலைந்து கலைந்திருந்த
 என் தலைமுடியை
மேலும் கலைத்து
பணியச் செய்து
பார் இப்போது
முன்னை விட
அழகாகி விட்டாய்
என்றாய்…

அன்று முதல்
மாறியது
என்
தலை எழில்
மட்டுமல்ல …

காதல்  கன்னி
உன் 
கை பட்டு
தடதடத்து
தடுமாறிப்
போனது
 என்
 தலை எழுத்தும்
கூடத்தான்…

0 Responses